Home இலங்கை யாழில். தேவாலயத்திற்குள் புகுந்து அருட்தந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளை

யாழில். தேவாலயத்திற்குள் புகுந்து அருட்தந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளை

by admin

தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அருட்தந்தையரின் கழுத்தில் கத்தி வைத்து , பெருமளவான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.  யாழ்ப்பாணம் , கல்வியங்காட்டு பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றினுள் நேற்றைய தினம் வியாழக்கிழமை அத்துமீறி நுழைந்த நால்வர் கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று அருட்தந்தையரின் கழுத்தில் கத்தியை வைத்து , மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டது.
அருட்தந்தையரின் 30 ஆயிரம் ரூபாய் பணமும் , தேவாலய உண்டியலில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் , சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் கோப்பாய்  காவல்துறையினா் தெரிவித்தனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More