Home இலங்கை கசூரினா கடற்கரையில் போதையில் குழப்பம் ; 06 புலம்பெயர் நாட்டவர்கள் விளக்கமறியலில்

கசூரினா கடற்கரையில் போதையில் குழப்பம் ; 06 புலம்பெயர் நாட்டவர்கள் விளக்கமறியலில்

by admin
மது போதையில் குழப்பம் விளைவித்த 06 புலம்பெயர் தமிழர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் இருந்த நான்கு பெண்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் , வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரைக்கு சென்று நேற்று முன்தினம் பொழுதை கழித்துள்ளனர்.  அதன் போது , அவர்களில் ஒருவரின் மோதிரத்தை காணவில்லை என , கடற்கரையில் கடமையில் இருந்த உயிர்காப்பு பிரிவை சேர்ந்த காவல்துறையினருடன் வாக்குவாதப்பட்டு , அவர்களுடன் முரண்பட்டுள்ளனர்.
அது தொடர்பில் காவல்துறையினர் வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து , கடற்கரைக்கு விரைந்தகாவல்துறையினர் 06 ஆண்களையும் 4 பெண்களையுமாக 10 பேரையும் கைது செய்து வட்டுக்கோட்டை  காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை 4 பெண்களையும் பிணையில் செல்ல அனுமதித்த மன்று , 06 ஆண்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஐந்து பேர் கனேடியன் பிரஜைகள் எனவும் , ஒருவர் இலண்டன் பிரஜை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More