Home இலங்கை திருநெல்வேலியில் கொள்ளை முயற்சி – அயலவர்கள் விழித்ததால் கொள்ளையர்கள் தப்பியோட்டம்

திருநெல்வேலியில் கொள்ளை முயற்சி – அயலவர்கள் விழித்ததால் கொள்ளையர்கள் தப்பியோட்டம்

by admin

 

நள்ளிரவு நேரம் வீட்டிற்குள் அத்துமீறி நுழைத்து , வீட்டில் இருந்தவர்களை கட்டி வைத்து கொள்ளையிட முயற்சித்த கும்பல் வீட்டார் குரல் எழுப்பியதால் தப்பியோடியுள்ளது.  யாழ்ப்பாணம் திருநெல்வேலி , பாற்பண்ணை பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பாற்பண்ணை பகுதியில் உள்ள வீடொன்றினுள் நள்ளிரவு நேரம் வீட்டின் ஓட்டினை பிரித்து உள் இறங்கிய மூவர் அடங்கிய முகமூடி கொள்ளைக்கும்பல் , வீட்டில் இருந்தவர்களை கட்டி வைத்து , கழுத்து கத்தியை வைத்து ” நகைகள் எங்கே ?” என மிரட்டி கொள்ளையிட முயற்சித்துள்ளனர்.
அவ்வேளை வீட்டின் உரிமையாளர் அபாய குரல் எழுப்பியதை அடுத்து , அயல் வீட்டார்கள் தமது மின் விளக்குகளை ஒளிர விட்டனர். அதனை அவதானித்த கொள்ளைக்கும்பல் , தாம் கொண்டு வந்திருந்த பெரிய கத்தி ஒன்றினையும் வீட்டில் கைவிட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை நேற்று முன்தினம் வியாழக்கிழமை குறித்த வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள தேவாலயம் ஒன்றினுள் புகுந்த முகமூடி கொள்ளை கும்பல் , பாதிரியாரின் கழுத்து கத்தி வைத்து , பாதிரியாரின் 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் தேவாலய உண்டியலில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்று இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More