Home இலங்கை சாதனைப் பெண் யாழில் கௌரவிப்பு

சாதனைப் பெண் யாழில் கௌரவிப்பு

by admin

 

72 வயதில் இரண்டு தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்த முல்லைத்தீவை சேர்ந்த அகிலத்திருநாயகிக்கு இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் கௌரவிப்பு இடம்பெற்றது.

யாழ்.சிறைச்சாலை நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் ஆரம்பத்தில், சாதனை பெண் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் முன்பாக யாழ் மாவட்ட செயலர் மற்றும் உத்தியோகத்தரால் கௌரவிக்கப்பட்டார்.

தொடர்ந்து மாவட்ட செயலகத்தின் முன்பாக இருந்து வாகன பேரணியில் சாதனைப் பெண் அகிலத்திருநாயகி யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் வைத்து, நிர்வாகத்தினரால் அவருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

முல்லைத்தீவு – முள்ளியவளை, சேர்ந்த அகிலத்திருநாயகி அண்மையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற நேஷனல் மாஸ்டர்ஸ் என்ட் சீனியர் அத்லடிக்ஸ் (National Masters & Seniors Athletics) போட்டியில் கலந்து கொண்டு இரண்டு தங்கப் பதக்கங்களை தனதாக்கியுள்ளார்.

1500 மீட்டர் ஓட்டப்போட்டி மற்றும், 5000m விரைவு நடை ஆகிய போட்டிகளில் தங்கப் பதக்கங்களையும், 800m ஓட்டபோட்டியில் வெங்கலப் பதக்கத்தையும் தனதாக்கியுள்ளார். 72 வயதுடைய இவர் ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More