Home இலங்கை பருத்தித்துறை நீதிமன்றில் குழப்பம் விளைவித்த காவற்துறை உத்தியோகஸ்தருக்கு பிணை

பருத்தித்துறை நீதிமன்றில் குழப்பம் விளைவித்த காவற்துறை உத்தியோகஸ்தருக்கு பிணை

by admin

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற நடவடிக்கைகளை குழப்பும் விதமாக செயற்பட்ட காவற்துறை  உத்தியோகஸ்தரை ஆள் பிணையில் செல்ல மன்று அனுமதித்துள்ளது.

கொழும்பு மாளிகாவத்தை காவல் நிலையத்தில் தற்போது கடமையாற்றி வரும் , யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியை சேர்ந்த காவற்துறை  உத்தியோகஸ்தர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் சாட்சியம் அளிப்பதற்காக சமூகம் அளித்திருந்தார்.

அதன் போது நீதிமன்ற நடவடிக்கைளை குழப்பும் விதமாக செயற்பட்டார் எனும் குற்றச்சாட்டில் , அவரை கைது செய்து, நீதிமன்ற காவற்துறையினர்  மன்றில் முற்படுத்தினர்.

அதனை அடுத்து அவரை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்க மன்று உத்தரவிட்டு இருந்தது.

அந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (05.12.23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , குறித்த காவற்துறை  உத்தியோகஸ்தரை ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அனுமதித்த மன்று,வ ழக்கினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More