Home இலங்கை சிலாவத்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 07 பேர் கைது.

சிலாவத்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 07 பேர் கைது.

by admin

 

சிலாவத்துறை கடற்பரப்பில்  சட்டவிரோதமாக  கடலட்டை பிடித்த 07 பேர் கடற்படையினரால் நேற்று புதன்கிழமை (13) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.  சிலாவத்துறை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட  தேடுதல் நடவடிக்கையின் போது  சட்டவிரோதமான முறையில்  நீரில் மூழ்கி   கடலட்டை   பிடித்துக் கொண்டிருந்த     07 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இதன் போது  02  படகுகள், டைவிங் கருவிகள் மற்றும் சட்டவிரோதமாக  பிடிக்கப்பட்ட சுமார் 874 கடல்  அட்டைகளும்  கைப்பற்றப்பட்டன.   கைது செய்யப்பட்டவர்கள் மன்னாரைச் சேர்ந்த 22 வயதுக்கும் 48 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவர். 07 பேரும் அவர்களின் உடைமைகள் மற்றும் கடல் அட்டைகள்  என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவத்துறை கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More