Home இலங்கை யாழ்.திருநெல்வேலியில் மூவர் போதைப்பொருட்களுடன் கைது!

யாழ்.திருநெல்வேலியில் மூவர் போதைப்பொருட்களுடன் கைது!

by admin

யாழ்ப்பாணம் , திருநெல்வேலி பகுதியில் மூவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியில் போதை பொருள் பாவனையில் சில இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர் என பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் , 20 , 21 மற்றும் 23 வயதுடைய மூவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து ஹெரோயின் மற்றும் மாவா பாக்கு என்பவை மீட்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More