Home இலங்கை யாழில். அதிகரித்துள்ள இணைய மோசடி – 26 இலட்ச ரூபாயை இருவர் இழந்தனர்!

யாழில். அதிகரித்துள்ள இணைய மோசடி – 26 இலட்ச ரூபாயை இருவர் இழந்தனர்!

by admin

இணைய மோசடியில் சிக்கி யாழில் மேலும் இருவர் 26 இலட்ச ரூபாய் பணத்தினை இழந்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இணையம் ஊடாக அதிக பணம் ஈட்ட முடியும் என ஆசை வார்த்தைகளுடனான விளம்பரங்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக மோசடிக்காரர்கள் செய்கின்றனர்.

அதனை நம்பி அந்த இணைப்பின் ஊடாக உட்செல்வோர் பணத்தினை இழந்து வருகின்றனர்.

குறித்த மோசடியினால் கடந்த வாரம் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் காவற்துறை பிரிவை சேர்ந்த இருவர் 30 இலட்சம் மற்றும் 16 இலட்ச ரூபாயை இழந்த நிலையில் காவற்துறை  நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் ஒருவர் 20 இலட்ச ரூபாயை இறந்துள்ளதாகவும், மற்றையவர் 06 இலட்ச ரூபாயை இழந்துள்ளதாகவும் காவல்  நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவ்வாறான இணைய மோசடியாளர்களிடம் சிக்காது மக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும் என பொலிஸார் அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More