Home இலங்கை யாழில். ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து கைதான நால்வருக்கும் பிணை!

யாழில். ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து கைதான நால்வருக்கும் பிணை!

by admin

யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரையும், காவற்துறைப்  பிணையில் காவற்துறையினர் விடுவித்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை (04.01.24) பயணம் மேற்கொண்டு , யாழ். மாவட்ட செயலகத்தில் , யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அதன் போது , மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட நால்வர் காவற்துறையினரின் தடைகளை மீறி முன்னோக்கி செல்ல முற்பட்ட நிலையில் , அவர்களை காவற்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நால்வரையும் யாழ்ப்பாண காவற்துறை  நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் வாக்கு மூலத்தை பெற்றுக்கொண்டு , அவர்களை காவற்துறையினர் பிணையில்  விடுவித்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More