Home இலங்கை 11 கஜமுத்துக்களுடன் கைதான சந்தேக நபர் தொடர்பில்   விசாரணை 

11 கஜமுத்துக்களுடன் கைதான சந்தேக நபர் தொடர்பில்   விசாரணை 

by admin
சுமார் 2.5 கோடி  விலை மதிக்கத்தக்க யானைகளை கொன்று பெறப்பட்ட அரியவகை   11 கஜமுத்துக்களுடன் கைதான சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக  கல்முனை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 29.04.2024 அன்று மாலை மட்டக்களப்பு மாவட்டம் காந்தி பூங்கா பகுதியில் சந்தேகத்திற்கிடமாக ஒருவர் சட்டவிரோத வியாபார நடவடிக்கை ஒன்றிற்காக வருகை தந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல் ஒன்றினை அடுத்து மாறுவேடத்தில் அங்கு சென்ற விசேட அதிரடிப்படை குழு கண்காணிப்பில் ஈடுபட்டு சந்தேக நபரை சுமார் 25 இலட்சம் பெறுமதியுடைய யானைகளை கொன்று பெறப்பட்ட அரியவகை  11 கஜமுத்துக்களுடன் கைது செய்திருந்தனர்.
கைதான சந்தேக நபர் 30 வயது மதிக்கத்தக்க  மயிலவெட்டுவான் பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் சட்டநடவடிக்கைக்காக மட்டக்களப்பு தலைமையக  காவல்துறையினரிடம் அதிரடிப்படையினரால் ஒப்படைக்கப்பட்ட நிலையில்   தற்போது    மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More