Home இலங்கை ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்பு – 04 இலங்கையா்கள் இந்தியாவில் கைது

ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்பு – 04 இலங்கையா்கள் இந்தியாவில் கைது

by admin

 

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில்   இலங்கையா்கள்  நால்வா்  இந்தியாவின் அகமதாபாத் நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று முன்தினம் (19) ந்திய பயங்கரவாத எதிர்ப்பு  காவல்துறையினரால்   அகமதாபாத் விமான நிலையத்தில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 12ஆம் திகதி அகமதாபாத் விமான நிலையத்தில் குண்டுத்தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக   கிடைத்த  தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கொழும்பை சேர்ந்த 27, 33, 35 மற்றும் 43 வயதான நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த நால்வரின் தொலைபேசிகள் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது  பாகிஸ்தானில் உள்ள முகவர்கள்,  தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடிய சில ஆயுதங்களை வழங்க அவர்களுக்கு உறுதியளித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

எவ்னினும் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னரே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More