Home இலங்கை பொது வேட்பாளர் தொடர்பில் கருத்து பரிமாற்ற நிகழ்வுக்கு ஏற்பாடு!

பொது வேட்பாளர் தொடர்பில் கருத்து பரிமாற்ற நிகழ்வுக்கு ஏற்பாடு!

by admin

பொது வேட்பாளர் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கருத்து பரிமாற்ற நிகழ்வொன்றினை நடத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை (27.05.24)  நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

பொது வேட்பாளர் தொடர்பிலான முன்னெடுப்புக்களை முன்னெடுத்துவரும் சிவில் சமூக பிரதிநிதிகள், பத்தி எழுத்தாளர்கள் உள்ளிட்டவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன்னை நேரில் சந்தித்து உரையாடியதாக குறிப்பிட்டுள்ளார்.

அதன் போது போது, பொது வேட்பாளர் தொடர்பிலான எனது நிலைப்பாட்டை அவர்களுக்கு கூறியதாகவும், அவர்களும், பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பிலான தமது கருத்துக்களையும் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன்போது, பொது வேட்பாளர் தொடர்பில் பொது வெளியில் கருத்துக்களை பரிமாறும் நிகழ்வினை நடாத்தி ,அதில் ஆரோக்கியமான கலந்துரையாடலை நடாத்து குறித்து இணக்கம் காணப்பட்டதாக சுமந்திர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 09ஆம் திகதி பொது வேட்பாளர் தொடர்பில் கருத்துக்களை பரிமாறும் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாது , இவர் அவரின் ஆள் இவரின் ஆள் என தாக்கி பேசாது தமது கருத்துக்களை முன் வைத்து ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் இடம்பெற்றால் மக்களுக்கும் தெளிவு கிடைக்கும். அதற்கவே அந்நிகழ்வை ஒழுங்கமைத்துள்ளதாகவும் வலியுறுத்தி உள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More