Home இலங்கை தேர்தலால் சர்வதேச நாணய நிதியத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை

தேர்தலால் சர்வதேச நாணய நிதியத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை

by admin

 

இலங்கையில் தேர்தல் நடத்துவதனால்  சர்வதேச நாணய நிதியத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என தொிவித்துள்ள  சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின்  சிரேஸ்ட தலைவர் பீட்டர் ப்ரூவர்  எந்தவொரு நாட்டின் ஜனநாயகத்தையும் சர்வதேச நாணய நிதியம் மதிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இலங்கையில் தேர்தல் நடத்தப்பட்டால் அது சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் நேரத்தை பாதிக்கும் என்பதனால்  உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து புதிய கால அட்டவணையை தயாரிக்க வேண்டும் எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளாா்.

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட கடன் வசதிக்கான இரண்டாவது மதிப்பீடு தொடர்பான எண்ணங்களை தெரிவிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை பிரதிநிதிகள் நடத்தும் விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More