Home இலங்கை விநாயகபுரத்தில் இளைஞனின் கை துண்டிப்பு!

விநாயகபுரத்தில் இளைஞனின் கை துண்டிப்பு!

by admin

கை துண்டாடப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி காவற்துறைப்  பிரிவிற்குட்பட்ட  விநாயகபுரம் பகுதியில் குறித்த சம்பவம் நேற்று (23.06.24) இரவு இடம்பெற்றுள்ளது.

காதல் பிணக்கு காரணமாக ஏற்பட்ட முரண்பாடு இச்சம்பவத்துக்கு வழியமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவத்தில் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனின் கையே துண்டாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவற்துறையினர் முன்னெடுத்துள்ளனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More