Home இலங்கை நயினாதீவு கப்பல் திருவிழாவில் வாள் வெட்டு – சந்தேகநபர் கைது!

நயினாதீவு கப்பல் திருவிழாவில் வாள் வெட்டு – சந்தேகநபர் கைது!

by admin
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய கப்பல் திருவிழாவின் போது , இளைஞன் ஒருவரை வாளால் வெட்டி படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (29.06.24)  கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற கப்பல் திருவிழாவின் போது, இளைஞன் ஒருவர் மீது மற்றுமொரு இளைஞன் வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு, சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு, நயினாதீவு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக  யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு , சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் காவற்துறையினர்  விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் தாக்குதலாளி கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்து இருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் சந்தேகநபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவற்துறையினர், ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More