Home இலங்கை யாழில். பொலிஸ் உத்தியோகஸ்தர் என கூறி 3 இலட்ச ரூபாய் கப்பம் பெற்ற இளைஞன் கைது!

யாழில். பொலிஸ் உத்தியோகஸ்தர் என கூறி 3 இலட்ச ரூபாய் கப்பம் பெற்ற இளைஞன் கைது!

by admin

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரிடம் தன்னை காவற்துறை  உத்தியோகஸ்தர் என அடையாளப்படுத்தி 3 இலட்ச ரூபாய் கப்பம் பெற்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் தன்னை காவற்துறை புலனாய்வு பிரிவை சேர்ந்த உத்தியோகஸ்தர் என அடையாளப்படுத்தி நபர் ஒருவரை மிரட்டி 3 இலட்ச ரூபாய் பணத்தினை கப்பமாக பெற்றுள்ளார்.

பணத்தினை கொடுத்த நபர் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்  நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் , முறைப்பாட்டின் பிரகாரம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் இளவாலை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை நேற்றைய தினம் புதன்கிழமை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை காவல்  நிலையத்தில் தடுத்து வைத்து காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More