Home இலக்கியம் கைவிளைக்கும் கலை அழகும் வாழ்விருப்பும்!

கைவிளைக்கும் கலை அழகும் வாழ்விருப்பும்!

by admin

கைவிளைக்கும் கலை அழகும் வாழ்விருப்பும்
வேலிகளில் பந்தல்களில் படர்கின்றன படர்கின்றன பற்றி படர்கின்றன

கைவிளைக்கும் கலை அழகும் வாழ்விருப்பும்
கண்குளிரும் பச்சை வண்ணம் விரிகின்றது விரிகின்றது கண்முன் விரிகின்றது

கைவிளைக்கும் கலை அழகும் வாழ்விருப்பும்
மண்ணழைந்து நீர்வார்க்க வளர்கின்றது வளர்கின்றது பசுமை வளர்கின்றது

மனித மனம் மகிழ்ச்சிகொள்ள பல்லுயிரும் வளர்ந்துகொள்ள
மனித மனம் மகிழ்ச்சிகொள்ள பல்லுயிரும் வளர்ந்துகொள்ள
விளைகின்றது உயிர்மை விளைகின்றது
விளைகின்றது உயிர்மை விளைகின்றது

பல வடிவம் பல வண்ணம் பல அழகு
பல வடிவம் பல வண்ணம் பல அழகு
வேலிகளில் பந்தல்களில் மிளிர்கின்றது மிளிர்கின்றது அழகு மிளிர்கின்றது

வேலிகளும் பந்தல்களும் வாசல்களில் வளவுகளில் வளர்ந்திருக்கும்
வீடுகளில் வளமிருக்கும் வாழ்விருக்கும் மகிழ்விருக்கும் பெரு மகிழ்விருக்கும்
வேலிகளும் பந்தல்களும் வாசல்களில் வளவுகளில் வளர்ந்திருக்கும்
வீடுகளில் வளமிருக்கும் வாழ்விருக்கும் மகிழ்விருக்கும் பெரு மகிழ்விருக்கும்
வளமளிக்கும் வாழ்வளிக்கும் வேலிகளும் பந்தல்களும் பெருவளமே பெருவளமே

அயற்சி அற்ற முயற்சிகளில் முனைவுகளில்
வேலிகளின் பந்தல்களின் பூங்காவனம் பூங்காவனம்
அயற்சி அற்ற முயற்சிகளில் முனைவுகளில்
வேலிகளின் பந்தல்களின் பூங்காவனம் பூங்காவனம்
குருவிகளின் பறவைகளின் இசைநடனம் இன்னியங்கள் இன்னியங்கள்
குருவிகளின் பறவைகளின் இசைநடனம் இன்னியங்கள் இன்னியங்கள்

உயிர் உலவும் உலகங்கள்
வேலிகளில் பந்தல்களில் உயிர்க்கின்றன உயிர்க்கின்றன
உலகை வளர்க்கின்றன

சி.ஜெயசங்கர்

 

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More