Home இலங்கை வெளிநாட்டவர்களிடம் பணத்தினை பெற்று யாழில் வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது!

வெளிநாட்டவர்களிடம் பணத்தினை பெற்று யாழில் வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது!

by admin

வெளிநாட்டில் வசிப்பவர்களிடம் பணங்களை பெற்று யாழில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வன்முறை கும்பலை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள், வீடுகளுக்கு தீ வைப்பு சம்பவங்கள் தொடர்பில் யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு  பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் உரும்பிராய் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய மூன்று இளைஞர்களை இன்றைய தினம் வியாழக்கிழமை (08.08.24) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 03 மோட்டார் சைக்கிள்கள், இரண்டு வாள்கள் மற்றும் நான்கு பெற்றோல் குண்டுகள் என்பவற்றையும் காவற்துறையினர் மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இயங்கிய வன்முறை கும்பலுடன் சேர்ந்து இயங்கிய நபர் ஒருவர் தற்போது இலங்கையில் இருந்து தப்பி சென்று இந்தியாவில் வசித்து வரும் நிலையில், வெளிநாட்டில் உள்ள நபர்கள் இந்தியாவில் உள்ள நபருக்கு பெருந்தொகை பணத்தினை வழங்கி, யாழ்ப்பாணத்தில் தாக்குதல் சம்பவங்களை முன்னெடுத்து வருகின்றனர் என காவற்துறை  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் யாழ்ப்பாண காவல்  நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், அவர்களுடன் சேர்ந்து இயங்கிய நபர்களையும் கைது செய்வதற்கு காவற்துறையினர் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More