Home இலங்கை ஒரே பார்வையில், யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள்!

ஒரே பார்வையில், யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள்!

by admin

யாழ் . கடலில் 100 அடி ஆழத்தில் கடலட்டை பிடித்துக்கொண்டிருந்தவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாண கடலில் சுமார் 100 அடி ஆழத்தில் கடலட்டை பிடித்துக்கொண்டிருந்த நபர் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

புத்தளம் பகுதியை சேர்ந்த சேவுதாதின் முகமதுதாவீன் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு , நாகர்கோவில் கடற்பகுதியில் சிலிண்டரை பயன்படுத்தி சுமார் 100 அடி ஆழத்தில் கடலட்டை பிடித்துக்கொண்டிருந்த வேளை , நெஞ்சு வலிப்பதாக கூறி , கடலின் மேல் பகுதிக்கு வந்துள்ளார்.

அதனை அடுத்து சக தொழிலாளிகள் அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , அங்கிருந்து யாழ் . போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் உயிரிழந்துள்ளார்.

யாழில். விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் உயிரிழப்பு

விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பிய முதியவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் . ஆனைப்பந்தி பகுதியை சேர்ந்த சின்னையா இரத்தினசிங்கம் (வயது 80) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த மாதம் 22ஆம் திகதி வீட்டில் இருந்து திருநெல்வேலி சந்தையில் மரக்கறி வாங்குவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்ற வேளை , எதிரே வந்த முச்சக்கர வண்டி மோதி விபத்துக்கு உள்ளானதில் முதியவர் காயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று , கடந்த 03ஆம் திகதி வீடு திரும்பிய நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை திடீரென சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

யாழில். வேலைக்கு சென்ற இளைஞன் உயிரிழப்பு

வேலைக்கு சென்ற இளைஞன் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு , உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம்,  நீர்வேலி பகுதியை சேர்ந்த தவராசா ரகுமாதவா (வயது 32) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
வீட்டில் இருந்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வேலைக்கு சென்ற நிலையில் , வேலைத்தளத்தில் நெஞ்சு வலிப்பதாக கூறியதை அடுத்து சக தொழிலாளர்கள் அவரை கோப்பாய் வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற வேளை , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
யாழில். தாய்ப்பால் புரைக்கேறி மூன்றரை மாத குழந்தை உயிரிழப்பு
தாய்ப்பால் புரைக்கேறியதில் மூன்றரை மாத குழந்தை உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணம் மிருசுவில் வடக்கை சேர்ந்த கபிலன் நிவேதா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More