Home இலங்கை யாழ் . நகரை அண்மித்த பகுதிகளில் காவற்துறையினர் தீவிர கண்காணிப்பில்!

யாழ் . நகரை அண்மித்த பகுதிகளில் காவற்துறையினர் தீவிர கண்காணிப்பில்!

by admin

யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளான மத்திய பேருந்து நிலையம், கோட்டை மற்றும் பண்ணை கடற்கரை பகுதிகளை சூழவுள்ளன பகுதிகளில் காவற்துறையினரின் கண்காணிப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளத.

குறித்த பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள், சமூக சீர்கேடான விடயங்கள் உள்ளிட்ட விரும்பத்தகாத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

அதனை அடுத்து குறித்த பகுதிகளில் திடீர் சுற்றுக்காவல் (ரோந்து) பணிகளை மேற்கொள்ளுமாறும் , இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறும் இதர பகுதிகளையும் கண்டறிந்து , இந்த செயற்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்குமாறு காவற்துறையினருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More