Home இலங்கை இந்திய மீனவர்கள் இருவர் தமிழகத்திற்கு அனுப்பி வைப்பு!

இந்திய மீனவர்கள் இருவர் தமிழகத்திற்கு அனுப்பி வைப்பு!

by admin

பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் இந்தியத்துணைத் தூதரக அதிகாரிகளால் நேற்று (29.08.23) நண்பகல் சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

படகு கவிழ்ந்ததில் மாயமான இந்திய மீனவர்களில் ஒருவரின் சடலம் மீடுகப்பட்டு நேற்று இராமேஸ்வரம் துறை முகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது கச்சத்தீவு அருகே கடலில் படகு கவிழ்ந்ததில் மாயமான 2 மீனவா்களில் ஒருவா் 28 ஆம் திகதி மாலை சடலமாக மீட்கப்பட்டார்.

ராமேசுவரத்திலிருந்து கடந்த திங்கட்கிழமை (26) விசைப்படகில் 4 மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே திங்கட்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது கடுமையான, காற்று வீசியதால் இந்தப் படகு கடலில் கவிழ்ந்தது. இரு இந்திய மீனவர்கள் கச்சத்தீவுக்கு நீந்திச் சென்று கரையேறினர். பின்னர், அவா்கள் இதுகுறித்து இலங்கைக் கடற்படையினரிடம் தெரிவித்தனர்.

கச்சத்தீவுக்கு நீந்திச் சென்ற இரண்டு மீனவர்களையும் கடற்படையினர் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்ட நிலையில் நேற்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இரண்டு மீனவர்களையும் நேற்று நண்பகல் யாழ். இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More