465
வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அராலி பகுதியை சேர்ந்த ப.சஞ்சயன் (வயது 22) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
வவுனியா – கோவில்குளம் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இரு இளைஞர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த மின்சார கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது. சம்பவம் நொடர்பில் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love

