Home இலங்கை யாழ் சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

யாழ் சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

by admin

 

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய  அபிவிருத்தி தொடர்பான  கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட  பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய  அபிவிருத்திக்கான நீர் வசதிகள், மின்சாரம் வசதிகள், காணி அபிவிருத்தி மற்றும் சுற்றுலா அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக  கலந்துரையாடப்பட்டன.

இக்கலந்துரையாடலில்  மாவட்ட  திட்டமிடல் பணிப்பாளர்,உதவி மாவட்ட செயலாளர்,  தெல்லிப்பளை பிரதேச செயலாளர், விமானப் படை அதிகாரிகள், Airport & Aviation servies pvt( Ltd) நிறுவன உதவி முகாமையாளர்,  விமான நிலைய செயற்பாட்டு முகாமையாளர், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பின் உதவிப் பணிப்பாளர் , தொழிற்துறைத் திணைக்களம் , வீதி அபிவிருத்தி திணைக்களம்    சந்தைப்படுத்தல் பிரிவு  ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More