Home இலங்கை மாதகலில் படகு விபத்து – கடற்தொழிலாளியை காணவில்லை

மாதகலில் படகு விபத்து – கடற்தொழிலாளியை காணவில்லை

by admin

 

யாழ்ப்பாணம் மாதகல் கடல் பகுதியில் படகு விபத்துக்கு உள்ளானதில் , கடற்தொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.   காணாமல் போன கடற்தொழிலாளியை , சக கடற்தொழிலாளர்கள் , கடற்படையினர் கடலில் தேடி வருகின்றனர்.

மாதகல் பகுதியை சேர்ந்த ஒரு கடற்தொழிலாளர்கள் கடற்தொழிலுக்காக படகொன்றில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை கடலுக்கு சென்று இருந்தனர்.  அந்நிலையில் கடலில் படகு கவிழ்ந்து மூழ்கிய நிலையில் ஒருவர் கரையை நோக்கி நீந்தி வந்த வேளை , சக கடற்தொழிலாளர்கள் கண்டு , அவரை மீட்டு கரை சேர்ந்தனர்
மற்றையவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். வரை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More