Home இலங்கை தேர்தல் பிரச்சாரத்திற்கு மைதானம் பெறுவதில் முரண்பாடு

தேர்தல் பிரச்சாரத்திற்கு மைதானம் பெறுவதில் முரண்பாடு

by admin

 

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் தேர்தல் பிரச்சார  நடவடிக்கைக்காக மைதானத்தை பெறுவதில் சகோதரர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில்  காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.  சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நெல்லியடியில் உள்ள மைதானத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
குறித்த மைதானத்தில் எதிர்வரும் வாரம் எதிர்க்கட்சித் தலைவரின் பிரச்சார கூட்டத்தினை நடாத்த ஒருவர் மைதானத்தினை கேட்டுள்ளார்.
மைதான நிர்வாகத்தினர் , தமக்கு அன்றைய தினம் வேறு நிகழ்வுகள் இருப்பதனால் மைதானம் தர முடியாது என மறுத்துள்ளனர். அதனால் அவர்களை அச்சுறுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவரின் பிரச்சாரத்திற்கு மைதானம் கேட்டவர் நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையத்து ஜனாதிபதியின் நிகழ்வுக்கு மைதானத்தை பெற்றவரின் கவனத்திற்கு மைதான நிர்வாகம் இந்த விடயத்தை கொண்டு சென்றுள்ளனர்.
அதனை அடுத்து ஜனாதிபதியின் நிகழ்வுக்கு மைதானம் பெற்றவர் , எதிர்க்கட்சித் தலைவரின் நிகழ்வுக்கு மைதானத்தை பெற்றவருடன் முரண்பட்டுக் கொண்ட நிலையில், ஜனாதிபதியின் நிகழ்வுக்கு மைதானம் பெற்றவர் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி  காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை முரண்பட்டு கொண்ட இருவரும் பிரபல வர்த்தகர்கள் என்பதுடன் , சகோதரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More