Home இலங்கை மன்னாரில்  தமிழ் பொது வேட்பாளரை   ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் 

மன்னாரில்  தமிழ் பொது வேட்பாளரை   ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் 

by admin

 

ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் அவர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(13) மாலை 4.30மணியளவில்  மன்னார் நகர பேருந்து நிலையத்தில் இடம் பெற உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மோகன்ராஜ் ஒருங்கிணைப்பில் குறித்த பொதுக்கூட்டம் இடம் பெற்றது. இதன்போது ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனுக்கு மன்னார் மக்கள் அமோக வரவேற்பு வழங்கினர்.

குறித்த பொதுக் கூட்டத்தில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன்,ஆ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  சுரேஸ் பிரேமசந்திரன், முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,  தமிழ் தேசிய கட்சியின் தலைவர்  சிரேஷ்ட   சட்டத்தரணி சிறிகாந்தா, முன்னாள் யாழ் மேயர் மணிவண்ணன்:அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் முன்னாள் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இதன்போது ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களை ஆதரித்து,தமிழ் மக்கள் சங்கு சின்னத்திற்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து உரை நிகழ்த்தினர். சுமார் ஆயிரம் பேர் வரை குறித்த கூட்டத்தில் கலந்து  கொண்டிருந்தனர்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More