Home இலங்கை பசுமாட்டை வெட்டியவர்கள் விளக்கமறியலில்

பசுமாட்டை வெட்டியவர்கள் விளக்கமறியலில்

by admin

 

யாழ்ப்பாணத்தில் கன்றுத்தாச்சி பசுமாட்டினை கொலை செய்து இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  பொன்னாலை கிருஷ்ணன் கோவிலுக்கு பின்புறமாக உள்ள புதர் ஒன்றினுள் கடந்த வெள்ளிக்கிழமை 05 மாத கன்றுத் தாச்சி மாட்டினை வெட்டி இறைச்சியாக்கிய பின்னர் , இறைச்சி கழிவுகளை அப்பகுதிகளில் வீசி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை  காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வ சென்று து விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் , மாட்டினை வெட்டிய குற்றத்தில் மூவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , மல்லாகம் நீதவான் நீதிமன்றில் அவர்களை முற்படுத்திய வேளை அவர்களை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More