Home இலங்கை பருத்தித்துறையில் 12 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

பருத்தித்துறையில் 12 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

by admin
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 12 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  படகொன்றில் 12 பேரும் பருத்தித்துறை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை , அப்பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவர்களை கைது செய்ததுடன் , அவர்களின் படகினையும் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்டவர்களையும் படகினையும் மயிலிட்டி கரைக்கு கொண்டு வந்துள்ள கடற்படையினர் , கைது செய்யப்பட்டவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More