Home இலங்கை முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பான யோசனை அமைச்சரவையில்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பான யோசனை அமைச்சரவையில்

by admin

 

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பான யோசனையை அமைச்சரவையில் முன்வைக்க வுள்ளதாக பதில்  காவல்துறை மாஅதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். குறித்த யோசனை தொடர்பில் அமைச்சரவை வழங்கும் தீர்மானத்தின் பின்னர் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை குறைப்பதா, இல்லையா என்பது தொடர்பான  தீர்மானம் மேற்கொள்ளப்படுமென  அவா் தொிவித்துள்ளாா்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு அமைச்சரவைப் பத்திரமொன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும்  பதில்  காவலடதுறை மாஅதிபர்   தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More