Home இலங்கை மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் இரத்து

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் இரத்து

by admin

 

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக  தொிவித்துள்ள அதன் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க   சாரதிகள் செய்த பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகளுக்கு அமைவாக,  அவை  தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக   தெரிவித்துள்ளார்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More