Home இலங்கை சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களிற்கான நியமனக்கடிதம் வழங்கல்

சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களிற்கான நியமனக்கடிதம் வழங்கல்

by admin

 

நாளைய தினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள  நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்களிற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வானது  யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

இவ் நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வில்  கருத்துத் தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர் ,

நாளை நடைபெறவுள்ள    நாடாளுமன்றத் தேர்தல் சட்ட வரையறைகளுக்கமைய, தேர்தல் கடமைகளில் அனைவரும்  ஒன்றிணைந்து செயற்பட்டு  நீதியாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெற  ஒத்துழைப்பினை நல்குமாறு கேட்டுக்கொண்டு, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களை வாழ்த்தி அவர்களுக்குரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைத்தார்.

இந் நிகழ்வில் மேலதிக அறிவுறுத்தல்களை சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்களுக்கு உதவித் தேர்தல்கள் ஆணையாளர் திரு. இ.கி.அமல்ராஜ் வழங்கினார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More