Home இலங்கை ரணில் VS ரவி – இழுபறியில் NDF – வர்த்தமானி அறிவிப்பை ரத்துச் செய்ய முடியாது!

ரணில் VS ரவி – இழுபறியில் NDF – வர்த்தமானி அறிவிப்பை ரத்துச் செய்ய முடியாது!

by admin

புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசியப் பட்டியலில் ரவி கருணாநாயக்கவை  நாடாளுமன்ற உறுப்பினராக  நியமித்தமை தொடர்பான சர்ச்சை தேர்தல் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, தேசிய பட்டியலின் பெயரை உத்தியோகபூர்வமாக சமர்ப்பித்ததன் பின்னர் வர்த்தமானி மூலம் ஆணைக்குழு தனது கடமையை நிறைவேற்றியுள்ளதாக குறிப்பிட்டார்.

“தேசியப் பட்டியலில் உள்வாங்கவேண்டியவர்களின் பெயர்களை கட்சியின் செயலாளர் உத்தியோகபூர்வமாக கையளித்தவுடன், ஆணைக்குழு அதனை உத்தியோகபூர்வமாகக் கருதி அதன்படி செயற்படுகிறது” என அவர் விளக்கியுள்ளார். கட்சியின் உள்விவகாரங்களில் தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும்,  எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய முடியாது எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

தேசியப் பட்டியலில் ரவி கருணாநாயக்க நாடாளுமன்ற உறுப்பினராக  நியமனம் செய்யப்பட்டமை தொடர்பில் தேசிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் ஷியாமலா பெரேரா தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார். எனினும், இந்த நியமனம் ஒருமனதாக எடுக்கப்படாததால் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More