Home இலங்கை யாழில் இருந்து பொலன்னறுவைக்கு நல்லிணக்க பயணம்

யாழில் இருந்து பொலன்னறுவைக்கு நல்லிணக்க பயணம்

by admin

 

சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் யாழ்ப்பாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கிடையிலான இரு நாள் நல்லிணக்க கள பயணமாக, யாழ்ப்பாண மாவட்ட உத்தியோகத்தர்கள் பொலன்னறுவைக்குச் சென்றனர்.

இவ் நல்லிணக்க  கள பயணத்தில் பொலன்னறுவை மாவட்டச் செயலாளர் , உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல்,  மாற்றுத்திறனாளிகள் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்கள் தரிசிப்புக்கள் மற்றும்  அனுபவ பகிர்வை  உள்ளடக்கியதாக அமைந்தது.

இவ் நல்லிணக்ககள பயணத்தினை FAIR MED நிறுவனம் ஒழுங்கமைப்புச் செய்தது. இவ் கள பயணத்தில்  அரசாங்க அதிபர், உதவி மாவட்டச் செயலாளர், மாவட்ட சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More