Home இலங்கை விபத்தில் பிறப்பு – இறப்பு பதிவாளர் உயிரிழப்பு

விபத்தில் பிறப்பு – இறப்பு பதிவாளர் உயிரிழப்பு

by admin

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கார் – மோட்டார் சைக்கிள் விபத்தில் பிறப்பு – இறப்பு பதிவாளர் உயிரிழந்துள்ளார். பிறப்பு – இறப்பு பதிவாளரான தாவடி கிழக்கை சேர்ந்த அன்னலிங்கம் செந்தில்குமரேசன் (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மானிப்பாய் பகுதியில் இருந்து தாவடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் , படுகாயமடைந்தவரை யாழ் . போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை வழியில் உயிரிழந்துள்ளார். விபத்து சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More