Home இலங்கை 23 தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை –

23 தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை –

03 படகோட்டிகளுக்கு 4 மில்லியன் அபராதமும் 06 மாத சிறையும்

by admin

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 23 தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் 06 வருடங்களுக்கு ஒத்தவைத்த 2 வருட சிறைத்தண்டனை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பினுள் மூன்று படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். மறுநாள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட , நிலையில் அவர்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மன்றில் எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் 23 கடற்தொழிலாளர்களுக்கும் 02 வருட சிறைத்தண்டனை விதித்த மன்று , அதனை 06 மாதங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.

அதேவேளை , குறித்த 23 பேரில் 03 படகோட்டிகள் ஆவார்கள். மூன்று படகோட்டிகளுக்கும் மேலதிகமாக 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் , 4 மில்லியன் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை கட்ட தவறின் 03 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மன்று தீர்ப்பளித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More