Home இலங்கை கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரும் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரும் விளக்கமறியலில்

by admin

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 14 இராமேஸ்வர மீனவர்களையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று (5) வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று (4) காலை மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் தலைமன்னார் கடற்படையினரால் இன்று வியாழக்கிழமை (5) அதிகாலை கைது செய்யப்பட்டு தலைமன்னார் கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.

விசாரணைகளின் பின்னர் தலைமன்னார் கடற்படையினர் குறித்த மீனவர்களை இன்று வியாழன் மதியம் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் இன்று (5) மாலை மன்னார் நீதிமன்றத்தில் முற்படுத்தினர். இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 14 இந்திய மீனவர்களையும் எதிர் வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More