Home இலங்கை வடக்கில் பரவும் மர்ம காய்ச்சல் – ஐவர் உயிரிழப்பு

வடக்கில் பரவும் மர்ம காய்ச்சல் – ஐவர் உயிரிழப்பு

மர்ம காய்ச்சலால் வடமராட்சியை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

by admin
யாழ் . போதனா வைத்தியசாலையில் கடத்த சில நாட்களில் மர்ம காய்ச்சலால் ஐவர் உயிரிழந்துள்ளனர்.  திடீர் காய்ச்சல் காரணமாக போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  அவர்களின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  அதேவேளை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் காய்ச்சலால் 30 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த கடும் மழை காரணமாக வெள்ள அனர்த்தத்தால், எலிக்காய்ச்சல் பரவ கூடிய சாத்தியங்கள் உள்ள எனவே பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். காய்ச்சல் , சடுதியான சுகவீனம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும் என சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர்.

 மர்ம காய்ச்சலால் வடமராட்சியை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த சில நாள்களில் உயிரிழப்புக்கள் ஏற்படுவது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆ.கேதீஸ்வரனுடன் நேற்றையதினம் தொலைபேசியில் உரையாடினார்.

இதன்போது, வடமராட்சியைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களின் உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் ஆளுநரிடம் தெரிவித்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், எலிக்காய்ச்சலாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அதற்கு அமைவாக தடுப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

புலோலி மற்றும் கற்கோவளம் ஆகிய பிரதேசங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்தப் பகுதியில் முதல் கட்டமாக இந்தத் தடுப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

தொடர் நடவடிக்கைகள் தொடர்பில் அறியத்தருமாறும் ஆளுநர் இதன்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More