Home இலங்கை முள்ளிவாய்க்காலில் ஒதுங்கிய படகிலிருந்த மியன்மாா் நாட்டினருக்கு விளக்கமறியல்

முள்ளிவாய்க்காலில் ஒதுங்கிய படகிலிருந்த மியன்மாா் நாட்டினருக்கு விளக்கமறியல்

by admin

 

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில்  கடந்த     வியாழக்கிழமை (19) 103      கரையொதுங்கிய படகிலிருந்து  மீட்கப்பட்ட . மியன்மாா்   அகதிகளும் அவர்களை ஏற்றிச் சென்ற படகில் இருந்த பணியாளர்களும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

குறித்த மியன்மார் அகதிகளை படகுடன் மீட்ட கடற்படையினர், திருகோணமலை துறைமுகத்திற்கு நேற்று (20) கொண்டு சென்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் நீதிமன்றம் இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.  குறித்த படகில் இருந்து  25 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் , 12  பணியாளர்கள்உட்பட  103 பயணிகள் காணப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More