Home இலங்கை புன்னாலைக்கட்டுவனில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

புன்னாலைக்கட்டுவனில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

by admin
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.   குறித்த விபத்தில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை ஜெய்சங்கர் (60 வயது) என்பவர் உயிரிழந்துள்ளார்.
 புத்தூரிலிருந்து சுன்னாகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வாகனம் பலாலிலிருந்து ஏழாலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 குறித்த விபத்து சம்பவத்தை நடாத்திய வாகன சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில்,விபத்து சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More