Home இலங்கை பாலியல் துர்நடத்தையில் ஈடுபட்ட குற்றத்தில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது!

பாலியல் துர்நடத்தையில் ஈடுபட்ட குற்றத்தில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது!

by admin

யாழ்ப்பாணத்தில் பாலியல் துர்நடத்தையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோண்டாவில் பகுதியில் உள்ள மேல் மாடி வீடொன்றினை வாடகைக்கு பெற்று , கீழ் வீட்டில் வசிப்பவர்களுக்கு தெரியாமல் , மிக இரகசியமாக மேல் மாடியில் 17 வயது சிறுமி உள்ளிட்ட இருவரை வைத்து நபர் ஒருவர் பாலியல் துர்நடத்தையில்  ஈடுபட்டு வந்துள்ளார்.

இது குறித்து யாழ் , மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் புதன்கிழமை (29.01.25) குறித்த வீட்டினை சுற்றி வளைத்து மேல் வீட்டில்  பாலியல் துர்நடத்தையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உள்ளிட்ட இரு பெண்களையும் , அவர்களை வைத்து பாலியல் துர்நடத்தையில்    ஈடுபட்ட குற்றத்தில் 36 வயதுடைய நபரையும் கைது செய்தனர்
கைது செய்யப்பட்டவர்களை கோப்பாய் காவல்  நிலையத்தில் காவற்துறையினர் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை நபர் ஒருவரிடம் 15 ஆயிரம் ரூபாய் பணம் பெற்று , தமக்கு 10 ஆயிரம் ரூபாய் பணத்தினை வழங்குவதாக கைது செய்யப்பட்ட பெண்கள் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் , யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வடக்கில் சிறுமிகளை பாலியல் துர்நடத்தையில்   ஈடுபடுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் , கிளிநொச்சி பரந்தன் பகுதி மற்றும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதிகளில் பாலியல் துர்நடத்தையில்   ஈடுபட்ட குற்றத்தில் சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More