Home இலங்கை கணேமுல்ல சஞ்சீவ கொலை- இதுவரை 12 போ் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை- இதுவரை 12 போ் கைது

by editorenglish

கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் படுகொலையுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களைக் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் (CCD) கைது செய்துள்ளனர். குற்றச் செயல்களுக்கு உதவிய சந்தேகத்தின் பேரில் சந்தேகநபர்கள் நேற்று (28/02/2025) மினுவாங்கொடையில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை, மெதகொவ்வ பகுதியைச் சேர்ந்த 28 வயதான உதார நிர்மல் குணரத்ன என்ற இளைஞரே, குற்றச் செயல்களை மேற்கொள்வதற்கான தொடர்பாடல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட சிம் அட்டைகளை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். துனகஹா, மினுவாங்கொட வீதியில் வசிக்கும் 31 வயதான நளின் துஷ்யந்த என்பவரும் இதே குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.

இந்த அண்மைய‌ கைதுகளுடன், கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More