முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்து நாடாளுமன்றத்தில் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜீவன் தொண்டமான், முன்னாள் ஜனாதிபதியை ஒரு திருடன் மற்றும் பிச்சைக்காரன் என்று குறிப்பிட்டுள்ள நீதி அமைச்சரின் அறிக்கையை குறிப்பிட்டார்.
“இன்று நீங்கள் அனைவரும் மக்களால் வாக்களிக்கப்பட்டு, மக்கள் மாற்றத்தை விரும்பியதால் உங்கள் இருக்கைகளில் அமர்ந்திருக்கிறீர்கள். நிர்வாக ரீதியாக மட்டுமல்ல, அரசியல் கலாச்சார ரீதியாகவும் மக்கள் மாற்றத்தை விரும்பினர்,” என்று அவர் கூறினார்.
தேசத்தைக் காப்பாற்றிய ஒருவரைத் திருடன் என்றும் பிச்சைக்காரன் என்றும் அழைப்பது பகுத்தறிவற்றது என்று கூறிய தொண்டமான், நீதி அமைச்சரின் கூற்றைக் கண்டித்து, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.
நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, ஊழல் தொடர்பான பெயர்களைக் கொண்ட பட்டியல்களை அரசாங்கம் வெளியிட்டதாக குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர் “ஏதாவது சட்டவிரோதமாக நடந்திருந்தால் நடவடிக்கை எடுங்கள். அது சட்டவிரோதமானது இல்லையென்றால், ஒரு பட்டியலைக் காட்டி அதை சுற்றி வளைப்பதில் என்ன பயன் என கேள்வி எழுப்பினார்.