Home இலங்கை “இந்தியாவுடன் முரண்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கோடு சீனா மூக்கை நுழைக்கிறது”

“இந்தியாவுடன் முரண்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கோடு சீனா மூக்கை நுழைக்கிறது”

by editorenglish

மீனவர் பிரச்சினையை வைத்துக்கொண்டு த‌மக்கும் இந்தியாவுக்கும் இடையே முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாகவும் இதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என தெரிவித்த ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இந்த விடயத்தில் சீனா மூக்கை நுழைப்பதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (05/03/2025) நடைபெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை மீனவர்களுடன் நாங்கள் பேசும் போது, இந்திய ரோலர் படகுகளின் வருகை குறையுமாக இருந்தால் இந்தியா மற்றும் தமிழ் நாட்டுடன் பகைக்காமல் மாற்றுத் திட்டத்தை வழங்குவதாக கூறினர். பிரதமராக மன்மோங் சிங் இருந்த போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பாக ஆழ் கடல் மீன்பிடி முறையை அறிமுகப்படுத்தினால் பிரச்சினை தீரும் என்று நாங்கள் அவரிடம் கூறினோம். இந்நிலையில் தமிழ்நாட்டு முதலமைச்சரைச் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமைச்சரை கேட்கின்றோம். டில்லி அரசாங்கத்துடனும் பேசுவோம் என்றார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More