Home இலங்கைமட்டக்களப்பிலும் வாள்வெட்டுக் கலாசாரத்தை உருவாக்குகின்றனர்

மட்டக்களப்பிலும் வாள்வெட்டுக் கலாசாரத்தை உருவாக்குகின்றனர்

by editorenglish

மட்டக்களப்பில் வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் இறந்துள்ளார். ஆரையம்பதியிலும் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. சமூகத்தைக் குழப்பும் விதத்தில் பல்வேறு செயற்பாடுகள் நடக்கின்றன. ஆவா குழுவென்று ஒரு குழுவை யாழ்ப்பாணத்தில் உருவாக்கியிருந்தனர். கிரீஸ் மனிதர்களையும் உருவாக்கியிருந்தனர். இதனை உருவாக்கியவர்கள் யாரென மக்களுக்கு தெரியும். இப்போது மட்டக்களப்பிலும் வாள்வெட்டுக் கலாசாரத்தை உருவாக்குகின்றனர். ஜனாதிபதியும் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இதனால் இவற்றை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (06/03/2025) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தின் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு  மற்றும்  சமூக வலுவூட்டல்கள்  அமைச்சு மற்றும்  கடற்றொழில், நீரியல்  வளங்கள் மற்றும் கடல் வளங்கள்   அமைச்சு  மீதான  குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு  குறிப்பிட்டுள்ளாா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More