Home இலங்கை சாமரவுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டது!

சாமரவுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டது!

by admin

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியலை ஏப்ரல் 21ஆம் திகதி வரை நீடித்து, பதுளை நீதவான் நீதிமன்றம், திங்கட்கிழமை (07.04.25) உத்தரவிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில் ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க, கடமையாற்றிய போது பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்குவதற்காக மாகாண சபை ஊடாக வங்கியிலிருந்து 10 இலட்சம் ரூபாவை காசோலையாக பெற்று அதனை பணமாக மாற்றி தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியமை உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான, ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More