Home இலக்கியம்குவலயம் மீதினில் கொண்டாடும் வாழ்வு!

குவலயம் மீதினில் கொண்டாடும் வாழ்வு!

by admin

குவலயம் மீதினில் கொண்டாடும் வாழ்வு

 

வாவிகள் கடந்து வயல்வெளி திரிந்து

வீதிகள் வளவுகள் எல்லாமும் நிறைத்து

முற்றங்கள் மகிழ வாசல்கள் கடந்து

வீடுகள் எல்லாமும் நிறைந்திடும் மகிழ்வு

 

தொன்மைத் தமிழரின் தொல்லிசை மொழியாம்

சொர்ணாளி ரீங்காரம் செவிகளில் நிறைக்க

கூடி முழங்கிடும் குதித்தாட வைத்திடும்

ஆதித்தமிழ் லயம் பறையொலி முழக்கம்

 

எங்கும் நிறைந்திட எதிலும் உறைந்திட

எமதென எமதெனக் கிளர்ந்திடும் மனிதர்

காவியம் படித்தலில் உடுக்கொலி சிலிர்ப்பினில்

அம்மானை சிலம்பின் மணியொலிப் பரவலில்

 

குலவைகள் போட்டு குதித்து ஆடிடும்

மனிதர்கள் மனத்தை ஆற்றிடும் சடங்கு

குவலயம் மீதினில் மனிதர்கள் வாழ்வை

கொண்டாட்டமாக்கிய முன்னோர்கள் வாழ்க

 

சி.ஜெயசங்கர்,

09.06.2025

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More