Home இலங்கையாழ். பல்கலையில் இருந்து , ரி – 56 துப்பாக்கி , நான்கு மகசீன்கள் , மருந்து பொருட்கள் உள்ளிட்டவை மீட்பு

யாழ். பல்கலையில் இருந்து , ரி – 56 துப்பாக்கி , நான்கு மகசீன்கள் , மருந்து பொருட்கள் உள்ளிட்டவை மீட்பு

by admin

 

யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் மேற்கூரையில் இருந்து ரி – 56 ரக துப்பாக்கி ஒன்று , அவற்றுக்கான நான்கு மகசீன்கள் , மூன்று சிறிய குண்டுகள் , கிளைமோரை வெடிக்க வைக்க பயன்படுத்தப்படும் ரிக்னேட்டர், வயர்கள் மற்றும் காயங்களுக்கான மருந்து பொருட்கள் , இரத்த கறையுடனான சாரம் என்பவை மீட்கப்பட்டுள்ளன.

நூலகத்தின் கூரை திருத்த வேலைகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன் போது கூரைக்குள் இரண்டு மகசீன்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் , அவை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் , கோப்பாய்  காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது
அதனை அடுத்து கோப்பாய் காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் ,இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  காவல்துறை விசேட அதிரடி படையினரின் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவின் ஒத்துழைப்புடன் ,  மகசீன்கள் இரண்டையும் மீட்டதுடன் , அதன் அருகில் சுமார் ஐந்தடி நீளமான வயரையும் மீட்டனர்
அதனை அடுத்து கூரைக்குள் மேலும் வெடி பொருட்கள் இருக்கலாம் எனும் சந்தேகத்தில் கூரையினுள் மேலும் தேடுதல் நடவடிக்கையை காவல்துறையினர் முன்னெடுத்த வேளை ,  ரி – 56 ரக துப்பாக்கி ஒன்று , மேலும் இரண்டு மகசீன்கள், மூன்று சிறிய குண்டுகள் , கிளைமோரை வெடிக்க வைக்க பயன்படுத்தப்படும் ரிக்னேட்டர், வயர்கள் மற்றும் காயங்களுக்கான மருந்து பொருட்கள், செலைன் , பஞ்சு , காயங்களுக்கு கட்டும் பன்டேஜ் ,  இரத்த கறையுடனான சாரம் உள்ளட்டவை மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட வெடிபொருட்கள் உள்ளிட்ட ஏனைய பொருட்கள் அனைத்தும் , கோப்பாய்  காவல் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ,  நாளைய தினம் சனிக்கிழமை அது தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் காவல்துறையினர் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் , அதனை அடுத்து மன்றினால் வழங்கப்படும் கட்டளைக்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை,  துப்பாக்கி மகசீன் சுற்றப்பட்டு இருந்த பத்திரிக்கை , செலைன் போத்தலின் காலாவதி திகதி என்பவற்றின் அடிப்படையில் அவை 2005 ஆம் ஆண்டு கால பகுதியில் கூரைக்குள் வைக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிற நிலையில் , கோப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More