Home உலகம்🚢 பிலிப்பைன்ஸில்  கப்பல் விபத்து – 15 பேர் உயிரிழப்பு – 28 பேரைக் காணவில்லை!

🚢 பிலிப்பைன்ஸில்  கப்பல் விபத்து – 15 பேர் உயிரிழப்பு – 28 பேரைக் காணவில்லை!

by admin

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற கப்பல் விபத்துக்குள்ளானதில், குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை (Philippine Coast Guard) இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. ஜம்போங்கா (Zamboanga City) நகரத்திலிருந்து திங்கள்கிழமை அதிகாலை 1:50 மணிக்கு (ஞாயிறு GMT 17:50), கப்பல் புறப்பட்டு நான்கு மணி நேரத்திற்குப் பிறகு அபாய சமிக்ஞையை (Distress Signal) அனுப்பியுள்ளது.

கப்பலில் 332 பயணிகளும் 27 பணியாளர்களும் என மொத்தம் 359 பேர் இருந்துள்ள நிலையில் பசிலன் மாகாணத்தின் பலுக்-பாலுக் (Baluk-Baluk) தீவிற்கு அருகே, கரையில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் கப்பல் மூழ்கியுள்ளது.

இதுவரை 316 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 28 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்களைத் தேடும் பணியில் கடலோர காவல்படை விமானங்கள், கடற்படை மற்றும் விமானப்படை கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. மீட்கப்பட்டவர்கள் பசிலன் தலைநகர் இசபெலாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், ஒரே நேரத்தில் அதிகப்படியான நோயாளிகள் வருவதால், அங்கு பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாக மருத்துவர் ரோனலின் பெரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான கப்பல் ஜம்போங்கா மற்றும் பசிலன் தீவுகளுக்கு இடையே இயங்கும் உள்நாட்டுப் போக்குவரத்து சேவையாக இருந்ததால், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் (98%) பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் கப்பலில் இருந்த 27 பணியாளர்களும் உள்ளூர் பிலிப்பைன்ஸ் நாட்டவர்களே.

இதுவரை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எவராவது பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் இல்லை. எனினும், காணாமல் போன 28 பேரின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.

Tag Words: #Philippines #FerryDisaster #MaritimeAccident #CoastGuard #Basilan #SearchAndRescue #BreakingNews #Zamboanga #LKA #SafetyAtSea

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More