314
சமீபத்தில் நடைபெற்ற நேரடி சோதனையில், வான்வெளியில் பறந்து வந்த 61 ட்ரோன்களில் 49 ட்ரோன்களை ஒரே ஒரு மின்காந்த அலை வீச்சு (Electromagnetic Pulse) மூலம் இந்த அமைப்பு வீழ்த்தியது. இந்தத் தொழில்நுட்பம் ‘லியோனிடாஸ்’ (Leonidas) என்று அழைக்கப்படுகிறது.
இது ட்ரோன்களை உடல்ரீதியாகத் தாக்காமல், அவற்றின் உள்ளே இருக்கும் மின்னணு சுற்றுகளை (Electronics) மின்காந்த அலைகள் மூலம் செயலிழக்கச் செய்கிறது. வலைகள் அல்லது ஏவுகணைகளைப் போலன்றி, இது ஒரே நேரத்தில் பல ட்ரோன்களைக் குறிவைத்துத் தாக்கும் திறன் கொண்டது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகள் மற்றும் விமான நிலையங்களில் பயன்படுத்தும்போது மற்ற சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்காத வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் ராணுவ முகாம்கள், முக்கிய நகரங்கள் மற்றும் விமான நிலையங்களை வான்வழி அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க இது ஒரு கவசமாகச் செயல்படும். நவீன காலப் போர்களில் ட்ரோன்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், இது ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
எதிரி நாட்டு ட்ரோன் கூட்டங்களை (Drone Swarms) ஒட்டுமொத்தமாகச் செயலிழக்கச் செய்யும் அதிநவீன High-Power Microwave (HPM) ஆயுதத்தை அமெரிக்க ராணுவம் வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
ஒருமுறை ஏவுகணை ஏவுவதற்கு ஆகும் கோடிக்கணக்கான செலவை விட, மின்சாரத்தைப் பயன்படுத்தி இயங்கும் இந்த முறை மிகவும் சிக்கனமானது.
Spread the love

