Home இலங்கைரகித ராஜபக்ஷ, சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு!

ரகித ராஜபக்ஷ, சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு!

by admin
முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான அருண வருணஹெந்திகே ஆகிய மூவரதும் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மூவரும் இன்று (ஜூலை 17) கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவர்களை எதிர்வரும் ஜூலை 28ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைதுக்கான பின்னணி: சொத்துக் குவிப்பு, நிதி மோசடி குற்றச்சாட்டுகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தொடர்பான முறைகேடுகள் குறித்து காவற்துறையின் விசேட விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
நீதிமன்ற நடவடிக்கை: விசாரணைகள் இன்னும் நிறைவடையாத நிலையிலும், சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படலாம் என்ற அடிப்படையிலும் காவற்துறையினரின் கோரிக்கையை ஏற்று, சந்தேகநபர்களின் விளக்கமறியல் உத்தரவை நீதிமன்றம் இன்றைய திகதியில் மேலும் நீடித்துள்ளது.
Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More